விபசாரத்தில் இளம் பெண்களை ஈடுபடுத்திய துணை நடிகை கைது!


வணிக வளாகங்களுக்கு இளம் பெண்களை வரவழைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்திய துணை நடிகையை போலீசார் கைது செய்தனர்.சென்னை நகரில் விபசாரத்தை தடுக்க போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் வடபழனி பகுதியில் தொலைபேசி எண் மூலமாக வாடிக்கையாளர்களிடம் பேசி, விபசாரத்திற்கு ஒரு பெண் அழைத்ததாக தகவல் கிடைத்தது. அந்த மொபைல் போனில் வாடிக்கையாளர் போல் போலீசார் தொடர்பு கொண்டனர்.
அப்போது, 10 ஆயிரம் ரூபாயுடன், வடபழனியில் உள்ள பிரபல வணிக மையம் ஒன்றில் இருந்து கொண்டு, அடையாளத்தை கூறி அந்த இடத்திற்கு வருமாறு பெண் கூறினார்.
அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், பெண்ணை அணுகினர். அப்போது, நவீன உடையில் இருந்த இரண்டு பெண்களை காட்டி, பணத்தை பெண் வாங்கினார்.
இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதை உறுதி செய்த போலீசார், பெண்ணை கைது செய்தனர். அவர் ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி, 33 என்பது தெரியவந்தது.
லட்சுமியும், ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சில படங்களில் துணை நடிகைகளாக நடித்துள்ளதாக தெரிவித்தனர். சமீப காலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார், பிரபல நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ் மற்றும் வீடுகளில் சோதனை நடத்துவதால் அதில் இருந்து தப்பிக்க தி.நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைத்து, தேவைப்படும் போது மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வணிகவளாகங்களுக்கு அழைத்துவந்தது தெரியவந்தது.
லட்சுமியை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்த போலீசார், பெண்கள் இருவரையும் மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item