பொட்டு அம்மானின் புலனாய்வுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வி!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைகின்றமையை தடுக்கத் தவறியது அந்த இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று இந்தியாவைச் சேர்ந்த அவதானிகள் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார்கள்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் வீ. நாராயணன், சன். ரி. வி தொலைக்காட்சியின் பிரதம செய்தி ஆசிரியர் ஏ. எஸ். பன்னீர்செல்வம், ஃபொரொன்ற் லைன் சஞ்சிகையின் விசேட செய்தியாளர் ரி. எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் இக்கருத்தை தூதரக அதிகாரிகளுக்கு முன்வைத்து இருக்கின்றார்கள்.

இது புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்டு இருக்கின்ற பாரிய விழுக்காடு, புலிகள் இயக்கத்தின் முழுக் கட்டமைப்பும் ஒட்டுமொத்தமாக சிதைந்து விட்டது, கருணா பிரிந்து செல்கின்றமையை தடுக்க தவறியது இயக்கத்தின் புலனாய்வுத் துறைக்கு ஏற்பட்ட வெளிப்படையான தோல்வி என்று பேராசிரியர் வீ. நாராயணன் கூறி இருக்கின்றார்.

புலிகள் இயக்கத்தின் புகழ் பெற்ற புலனாய்வுப் பிரிவு கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியது பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது என பன்னீர்செல்வம் முக்கியமாக குறிப்பிட்டு இருக்கின்றார்.

கருணாவின் பிரிவை அனுமானிக்கத் தவறியமையால் பொட்டு அம்மானின் உயிர் புலித் தலைமையால் பறிக்கப்படலாம் என்று எதிர்வு கூறி இருக்கின்றார் சுப்பிரமணியம்.

துணைத் தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு கிடைக்கப் பெற்று உள்ளன.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item