விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள்!!!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8500.html

புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக புனே காவல்துறையின் சமூக பாதுகாப்புப் பிரிவு (விபச்சாரத் தடுப்புப் பிரிவு)போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கரோலின் என்ற 22 வயதுப் பெண்ணையும், ராஜ்குமார் மரியதாசன் என்பவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட கரோலினின் முழுப் பெயர் கரோலின் ரஞ்சித் மரியதாசன். இவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். ஆனால் மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார். தமிழில் வாடா செல்லம் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ளார்.
அவரது தந்தை ரஞ்சித் சென்னையில் ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளாராம். ஆனால் இவர் சொந்தத் தந்தை இல்லையாம், வளர்ப்புத் தந்தையாம். இவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மரியதாசன், ரஞ்சித்தின் மகன் ஆவார். இவர் கரோலினின் வளர்ப்பு அண்ணனாக செயல்பட்டு வந்துள்ளார். கூடவே கரோலினின் மேனேஜராகவும் இருக்கிறாராம்.
இவர்கள் கூட்டாக இணைந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேவை மையமாக வைத்து விபச்சாரத்தில் குதித்துள்ளனர். எரவாடா என்ற இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவ்வப்போது கஸ்டமர்களுடன் தங்கிச் செல்வாராம் கரோலின்.
இவரது தந்தைதான் கோ ஆர்டினேட்டராக செயல்பட்டு வந்துள்ளார். கரோலின் தேவை என்றால் இவரை அணுக வேண்டுமாம். அவர் புனேவில் உள்ள அந்த ஹோட்டலுக்கு கரோலினையும், துணைக்கு ராஜ்குமாரையும் அணுப்பி வைப்பாராம். இரண்டு மணி நேரத்திற்கு ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.
அந்த ஹோட்டலில் இரண்டு அறைகள் போட வேண்டுமாம். ஒரு அறை கரோலினும், ராஜ்குமாரும் தங்குவதற்காம். இன்னொரு அறையில் வாடிக்கையாளருடன் உல்லாசமாக இருக்கவாம்.
பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளாராம் கரோலின். ஆனால் திரைப்படத்தில் இவருக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. மேலும் பணப் பற்றாக்குறையும் ஏற்படவே விபச்சாரத்தில் குதித்ததாக தெரிகிறது.