பொல்கொட ஏரியில் மீனவன் வலையில் சிக்கிய மனித சடலம்!

ஒரு மீனவர் மொறட்டுவை பிரதேசத்திலுள்ள பொல்கொட ஏரியில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் ஒரு பெரிய மீன் பிடிபட்டது போன்ற ஒரு உணர்வு அந்த மீனவனுக்கு ஏற்பட்டது.

கடலிலிருந்து ஏரிக்கு நுழைந்துவிட்ட சுறா போன்ற பெரிய மீன் தான் தனது வலையில் பிடிபட்டு விட்டதென்று அந்த மீனவன் மகிழ்ச்சி அடைந்தான்.

ஒரே தடவையாக வலையை பலமாக இழுத்து விட்டால் மீன் வலையை கிழித்தெறிந்துவிட்டு ஓடிவிடும் என்று அஞ்சி அந்த மீனவன் தனது படகுக் கருகில் இழுத்தான். அப்போது வலையிலிருந்த பொருளை பார்த்து அந்த மீனவன் அதிர்ச்சியடைந்து மயக்கமடையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

அவன் மெதுவாக தன்னை சுதாகரித்து கொண்டு பார்த்த போது தனது வலையில் ஒரு மனித சடலம் இருப்பதை கண்டு கொண்டான். இந்த விசயத்தை அறிந்த மொறட்டுவ பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று சடலத்தை மீட்டெடுத்தனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item