புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் அடங்கிய கும்பல் கைது!!
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post_10.html
புதையல் தோண்டுவதற்கென வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்திரிமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கிவந்த இவர்களுடைய பஸ்ஸை சோதனை செய்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இச்சோதனை இடம்பெற்றுள்ளது.
வில்பத்து வடக்கு பகுதியில் புதையல் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பல இடங்களை இவர்கள் பார்வையிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இரசாயன கல்வெடி மருந்து, வெடி நூல், இலத்திரனியல் கமரா மற்றும் புதையல் காணப்படுவதாகக் கண்டறியப்பட்ட குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்பவற்றை பொலிஸார் இவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
