பிரியாமணி செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் : பிரியாமணி மறுப்பு!

பிரியாமணி செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் : பிரியாமணி மறுப்பு!பிரியாமணியை செல்போனில் ரசிகர்கள் தொல்லை செய்வதாக செய்திகள் வெளியானது. தினமும் நிறைய பேர் செல்போனில் பேசி `ஐ லவ் யூ’, `ஐ லவ் யூ’ சொல்வதாகவும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவதாகவும் கூறப்பட்டது.இந்த தொந்தரவில் இருந்து மீள முடியாமல் பிரியாமணி தவிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் அதிக நேரம் சுவிட்ஆப்பிலேயே வைத்தாராம். இரவு நேரங்களிலும் போன் செய்து டார்ச்சர் செய்தார்களாம். தொல்லை கொடுத்தவர்களை போலீசார் பிடித்து விட்டனர் என்றும் தற்போது பிரியா மணி அந்த சச்சரவில் இருந்து மீண்டு விட்டார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, உறுதிப்படுத்த மறுத்தார்.
 -
அவர் கூறியதாவது:-
செல்போனில் எனக்கு தொந்தரவு எதுவும் வரவில்லை. நான் பழைய செல்போன் நம்பரைத் தான் பயன்படுத்துகிறேன். நண்பர்களுடன் பேசுவதையும் நிறுத்தவில்லை. படப்பிடிப்புக்கு வழக்கமாக செல்கிறேன். என்னை சுற்றி உள்ள நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும் பேசியும் தொல்லைகள் செய்வதாக செய்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை. கற்பனையாக அந்த செய்தி பரப்பப்பட்டு உள்ளது. நான் தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item