தீபாவளிப் பரிசாக குடிமக்களுக்கு மேலும் போதையை அதிகரித்த அரசு!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_2878.html
நமது நாட்டில் மதுபோதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கும் அதேவேளை மதுபோர்த்தல்களின் விலைகளும் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் மதுபான விற்பனையும், சிகரெட் விற்பனையிலும்தான் அதன் பொருளாதாரம் தங்கியுள்ளது.அந்த வகையில் சகல சாரயங்களினதும் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் சாராய லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த தகவலை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது. வைன் மற்றும் சாராயம் ஆகியவை 60 ரூபாவால் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பியர் போத்தல் ஒன்றின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
