தங்கையுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!!

திருகோணமலை நகரப்பகுதியில் தனது கணவரின் ஆணுறுப்பை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டவேளை தனது கணவர் தனக்கு தெரியாமல் தனது தங்கையுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்ததை அவதானித்த சந்தர்பத்தில் தனக்கு மனசுக்கு தாங்க முடியாத வேதனையினால் கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தியதாக மனைவி வைத்தியரிடம் தெரிவித்தார்.

தான் காதலித்து திருமணம் செய்தவர் தனக்கு துரோகம் செய்ததினாலேயே தான் கவலையில் இவ்வாறான வேலையில் ஈடுபட்டதாகவும், தன்னுடன் தங்கை ஒரே வீட்டில் வசித்து வருபவராகவும், சமூகத்தில் மதிக்கப்படக்கூடிய அரச தொழிலில் ஈடுபட்டுவருவதாகவும் மனைவி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பாசத்துடன் வாழ்ந்த மனைவிக்கு செய்த துரோகம் ஆணுறுப்பை இழக்கும் அளவுக்கு வந்து விட்டது.

இவ்வாறு மனைவியினால் தாக்கப்பட்டவர் ஒரு பாடசாலையின் ஆசிரியர் என்பதுடன் இவர் தொடர்பான ஏனைய விபரங்களை இவரின் நலன்கருதி இவ்விடத்தில் நாம் பிரசுரிக்கவில்லை.

இருந்தும் இவர் யார் என அறிய ஆவல் கொண்டவர்கள் பாடசாலைகளில் எந்த ஆசிரியர் நொண்டிக் கொண்டு வருகின்றார் என்பதை அவதானிக்கும் பட்சத்தில் மனைவியால் கடித்துக் குதறப்பட்டு ஆணுறுப்புச் சேதமடைந்த ஆசிரியர் இவர்தான் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item