1 நாளைக்கு 1 பில்லியன் பேர் பேஸ்புக் வசம்
https://besttamillnews.blogspot.com/2011/10/1-1.html
24 மணியத்தியாலங் களுக்குள் ஒரு பில்லியன் பேஸ்புக் பாவனையாளர்கள் இணையதளங்களுடன் தொடர்பு கொள்வதாக கணிப்பீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 600 ஆயிரம் பேர் பல மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இணையதளத்தில் செய்திகள் புகைப்படங்கள், என்பனவற்றை அனுமதியின்றி பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் பிறரின் தனிப்பட்ட விபரங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். கணிப்பீடுகளின்படி குறித்த நபர்கள் எவ்வாறு இவற்றினை தினமும் பெறுகிறார்கள் எனவும் விளக்கமும் தரப்படுகிறது.
இவ்வாறான செயல்படுபவர்களைத் தடுப்பதற்கு பேஸ்புக் இணையத்தளம் ஒரு சில உத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. நண்பர்கள் தமது கடவுச் சொல்லை கேட்கும்போது அவற்றினை வழங்கவதில் அவதானமாக இருக்கவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக் ஒப்பந்தம் செய்யும்போது வேறொருவர் அதன் கணக்குகளை மோசடி செய்வர் என எதிர்பார்க்க முடியுமென எச்சரிக்கை செய்கிறது. இன்னொருவருடைய பேஸ்புக் கணக்கை பெற்றுக் கொள்பவர் அவரது நண்பர்களுடைய தகவல்களைப் பெற்று பல குளறுபடிகளை செய்யலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறது.

