-30 C உறைபனியில் காரில் இரண்டு மாதங்கள் உயிருடன் இருந்த நபர்!
https://besttamillnews.blogspot.com/2012/02/30-c.html
பனிக்கட்டியால் மூடப்பட்ட காரில் இருந்து இரண்டு மாதங்களின் பின்னர் நபர் ஒருவர் உயிருடன் மீட்க்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
44 வயதான Peter Skyllberg என்பவர் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதியில் இருந்து தற்போது வரை -30C பாகை செல்சியஸ் வரை உள்ள உறை பனியில் சிக்கி இருந்திருக்கின்றார்.
இவரது கார் வடக்கு சுவீடனுக்கு அருகில் உள்ள Umea என்ற நகரில் தான் சிக்கியிருந்தது.
காரின் வெளிப்பகுதி மட்டும் அல்ல உட்பகுதி கூட கடுமையாக பனியின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது.
இது ஒரு அதிசயமான நிலை என்று வானிலை அவதானிகள் வியக்கின்றனர். காரிலிருந்து மீட்க்கப்பட்ட குறித்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
