நேடியவனை கைது செய்யுமாறு சர்வதேச பொலீஸ் பிடியாணை!


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு பொறுப்பாக இருந்த நெடியவன் அவர்களை கைது செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச பொலீசாரின் உதவியை நாடியுள்ளது என்று உயர்வு அறிகிறது.

இதையடுத்து நெடியவன் என்ற இயக்கப்பெயருடைய சிவபரன் பேரின்பநாயகம் என்பவரை கைது செய்யுமாறு சர்வதேச பொலீஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.

நெடியவன் 1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்தவர். பிறந்த இடம் வட்டுக்கோட்டை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரானார்.

சண்டை றீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் இலங்கை அரசுக்கு சவால் விடும் விதத்தில் புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதோடு இலங்கை அரசின் மீது ஆயுதம் இன்றி புதியதோர் போரை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே நெடியவனின் கீழ் இயங்கும் சர்வதேச கட்டமைப்புக்களை அடக்கி ஒடுக்கி ஜயம் கொள்ள வைக்கும் விதமாகவே இவ்வாறான செயலில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளமை தெரிகிறது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item