நண்பன் படத்தின் வெற்றியைத்(?) தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய இலியானா
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_1203.html
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள்.
இலியானா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது கூடவே ஆறு நபர்கள் அடங்கிய குழு அவருக்கு தேவையானதை செய்து தர காத்திருக்கும்.
படப்பிடிப்புக்கு இலியானா விமானத்தில் தான் வந்து செல்வார். ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவார். அதனால் பெரிய படத்தயாரிப்பாளர் மட்டுமே இலியானாவை நெருங்க முடியும் என்கிறது பட வட்டாரம்.
