19வயதுப் பெண்ணை பாலியல் பூஜை செய்த பூசகர் கைது!!
https://besttamillnews.blogspot.com/2012/01/19.html
மாத்தளை, கொஹம்வில பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவருடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த தேவாலயம் ஒன்றின் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கான யுவதி குறித்த பூசகரின் சகோதரியின் மகளாவார்.
குறிப்பிட்ட யுவதியுடன் எட்டு மாத காலமாக இவர் பாலியல் வல்லுறவு கொண்டிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யுவதியின் உடல் நிலையில் மாற்றம் காணப்பட்டதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த விடயங்கள் அம்பலமாகின.
அத்துடன் குறித்த யுவதி தற்போது தாய்மை அடைந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. மத போதகர் என்ற வகையில் இவர் இந்த யுவதியுடன் நெருங்கிப் பழகி தன் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டுள்ளார்.
