மேர்வினுக்கு இவையெல்லாம் தேவைதானா?
https://besttamillnews.blogspot.com/2011/12/we-have-open-new-website-pls-visit.html
அமைச்சர் மேர்வின் சில்வாவை காளி அம்மனின் சாபத்திலிருந்து மீட்கும் நோக்கில் அரசியல்வாதியொருவரும் சில பெண்களும் பரிகார பூஜை செய்துள்ளதாக சிங்களஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மனை மேர்வின் சில்வா இழிவு படுத்தியதற்காக இந்த அரசியல்வாதிக்கு நெருக்கமானவர்கள் அண்மையில் வாகனமொன்றில் காளி கோயிலுக்கு சென்று பரிகார பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.பாரிகார பூஜைக்காக ஆடு ஒன்றையும் கோயிலுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.பரிகார பூசை யாரின் பெயரில் செய்ய வேண்டுமென பூசகர் வினவியதாகவும், அப்போது மேர்வின் சில்வாவின் பெயரை கோயிலுக்குச் சென்றவர்கள் குறிப்பிட்டதாகவும் சிங்கள ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளது.