யாழில் 14 வயதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவன்

யாழ். கொக்குவில் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் நாமகள் வீதியைச் சேர்ந்த அரியதாஸ் கிருஷாந்தன் என்ற 14 வயது மாணவனே மேற்படி சடலமாக மீட்கப்பட்டவராவார். மேற்படி நபர் நேற்று முன்னிரவு தனது அறைக்குச் சென்று நீண்ட நேரமாகிய பின்னர் குடும்பத்தார் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்து.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண காவற்றுறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item